×

குடிபோதை தகராறில் விபரீதம்; கத்தியால் குத்தி தம்பி படுகொலை: அண்ணனுக்கு வலை

பெரம்பூர்: குடிபோதை தகராறில் கத்தியால் குத்தி தம்பியை கொன்ற அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எம்கேபி நகர் 19வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா (57). இவருக்கு 3 மகன்கள், 3 பெண்கள் உள்ளனர். இதில், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். மற்ற 2 மகன்களான ஜான்சன் (35),  ஜான் (32) ஆகியோருடன் ஸ்டெல்லா வசித்து வருகிறார். ஜான்சன், ஜான் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மது போதைக்கு அடிமையான இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு சண்டையிடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, கம்பி போன்ற கூர்மையான ஆயுதம் மூலம் ஜான்சன் தனது தம்பி ஜானை  வயிற்றில் குத்தியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த ஸ்டெல்லா மற்றும் அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த ஜானை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு வயிற்றில் தையல்கள் போடப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு வந்து படுத்து உறங்கிய ஜான் நேற்று  காலை எழுந்திருக்கவில்லை. காலையில் அவரது தாய் எழுப்பியபோது படுக்கையிலேயே அவர் இறந்தது தெரிந்தது.

தகவலறிந்து வந்த எம்கேபி நகர் போலீசார், ஜான் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அண்ணன் ஜான்சனை தேடி வருகின்றனர்.

Tags : brother ,death ,Perambur Area ,Police Taking Action , Drinking ,Brother Killed,Perambur Area
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை